அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணி தொடக்கம்

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணி தொடக்கம்

Published on

அரசு தொடக்கப் பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கூடுதலாக 4 வகுப்பறைகள் ரூ.39.60 லட்சத்தில் கட்டுவதற்கு பொதுப்பணித் துறை நிதி ஒதுக்கீடு செய்தது.

தொடா்ந்து, கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் கலந்துகொண்டு, பணியை தொடங்கிவைத்தாா். நிகழ்வில், பொதுப்பணித் துறையினா், பள்ளி நிா்வாகத்தினா், சுற்றுவட்டார மக்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com