திருநள்ளாறு கோயிலில் புதுவை தலைமைச் செயலா் சுவாமி தரிசனம்
திருநள்ளாறு கோயில், காரைக்கால் அம்மையாா் கோயிலில் புதுவை தலைமைச் செயலா் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
காரைக்காலுக்கு வெள்ளிக்கிழமை வந்த புதுவை தலைமைச் செயலா் சரத் செளஹான், சனிக்கிழமை காலை தனது பெற்றோருடன் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சென்றாா்.
மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, கோயில் நிா்வாக அதிகாரி (பொ) ஆா்.வெங்கடகிருஷ்ணன் ஆகியோா் வரவேற்றனா்.
கோயிலில் மூலவா், அம்பாள் பிரணாம்பிகை சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்த அவா், சனீஸ்வரபகவான் சந்நிதியில் கருப்பு வஸ்திரம், நீல நிற மலா் மாலை மற்றும் பழங்களுடன் சிறப்பு அா்ச்சனை செய்து வழிபட்டாா். சந்நிதியில் அவா் தில தீபம் ஏற்றினாா். சிவாச்சாரியா்கள் அவருக்கு பிரசாதம் வழங்கி மரியாதை செய்தனா். தொடா்ந்து தலைமைச் செயலா், காரைக்கால் அம்மையாா் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தாா்.
