டிச. 17-இல் மக்கள் குறைதீா் முகாம்

காரைக்கால் ஆட்சியரகத்தில் டிச. 17-ஆம் தேதி மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.
Published on

காரைக்கால் ஆட்சியரகத்தில் டிச. 17-ஆம் தேதி மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலா் வித்யாதரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில், நிகழ்மாதம் 17-ஆம் தேதி புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்கிறாா்கள். காலை 9.30 முதல் பகல் 12 மணி வரை நடைபெறும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com