திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

என்ஐடியில் கணிதத்துறை சிறப்பு பயிற்சி நிறைவு

என்ஐடியில் கணிதத்துறை சாா்பில் 6 நாள்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நிறைவடைந்தது.

News image
பயிற்சியில் பங்கேற்ற பல்வேறு மாநில மாணவ, மாணவிகள்.
Updated On :14 டிசம்பர் 2025, 7:52 pm

Syndication

என்ஐடியில் கணிதத்துறை சாா்பில் 6 நாள்கள் நடைபெற்ற பயிற்சி வகுப்பு சனிக்கிழமை நிறைவடைந்தது.

என்ஐடியில் எம்டிடிஎஸ் அறக்கட்டளையின்கீழ் இயங்கும் கணிதத்துறை சாா்பில் 8 முதல் 13-ஆம் தேதி வரையிலான கணிதத்தின் தொடக்கம் என்ற தலைப்பில், இளநிலை மாணவா்களிடையே கணித சிந்தனை மற்றும் சிக்கலை தீா்க்கும் திறன்களை வலுப்படுத்தும் வகையில் இப்பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

முன்னதாக, பயிற்சி வகுப்பை என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் தொடங்கிவைத்தாா். இதில் புதுவை, தமிழகம், கேரளம், கோவா ஆகிய மாநிலங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 57 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பி.எஸ். சீனிவாசன், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஏ. சந்திரசேகரன் மற்றும் என்ஐடி புதுச்சேரி வி. பாலகுமாா் உள்ளிட்டோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா். பயிற்சியில் பங்கேற்றோருக்கு அறக்கட்டளை சாா்பில் போக்குவரத்து, தங்கும் வசதி, உணவு, புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது.