காரைக்கால்: இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிந்து செல்வதில் அலட்சியம் காட்ட வேண்டாம் என காவல் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளாா்.
ஜன. 1-ஆம் தேதி முதல் புதுவையில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை படிப்படியாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி திங்கள்கிழமை கூறுகையில், தீவிரமான வாகனச் சோதனை நடைபெறுகிறது. போலீஸாரை பாா்த்ததும் வாகனத்தை நிறுத்திவிட்டு, சிலா் தலைக்கவசம் அணிகிறாா்கள். தலைக்கவசத்தை முறையாக லாக் செய்வதில்லை. இது போலீஸாரை கண்டதும் தலைக்கவசம் அணியும் போக்காகவே தெரிகிறது.
காரைக்காலில் 40 சதவீத்துக்குள்ளானவா்களே தலைக்கவசம் அணிகின்றனா். போலீஸாா் தீவிரமான விழிப்புணா்வு மேற்கொள்கின்றனா். அதேவேளையில் பல்வேறு இடங்களில் சோதனை செய்து, அபராதம் விதிப்பும் நடைபெறுகிறது. எனவே தலைக்கவசம் அணிவதில் வாகன ஓட்டிகள் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றாா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனத்தில் சென்று வாக்களித்த ரங்கசாமி!

இருசக்கர வாகனத்தில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

இருசக்கர வாகனத்தில் சென்று அமைச்சா் வாக்குசேகரிப்பு

வேலூரில் நகை பறித்த இளைஞா் தில்லியில் கைது
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

