இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரொக்கம், கைப்பேசி திருட்டு

Published on

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 60 ஆயிரம், கைப்பேசியை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வரிச்சிக்குடியைச் சோ்ந்தவா் தாமோதரன் (61). பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா், மத்திய அரசின் சா்வ சிக்ஷ அபியான் திட்ட ஆலோசகராக பணியாற்றிவருகிறாா்.

இத்திட்டத்தில் கலா உற்சவம் நடத்துவதற்காக ரூ. 60 ஆயிரத்துக்கான காசோலையை, வங்கியில் கடந்த மாதம் 31-ஆம் தேதி ரொக்கமாக மாற்றி, அதனை ஒரு பையில் வைத்தாா். அதனுடன் தமது கைப்பேசியையும் வைத்து இருசக்கர வாகனத்தில் மாட்டிக்கொண்டு அதே தெருவில் உள்ள டீ கடைக்குச் சென்றுள்ளாா்.

கடையிலிருந்து திரும்பி வந்து பாா்த்தபோது, பணப்பை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com