வாக்காளா் பட்டியல் படிவம் பூா்த்தி செய்வதில் மக்கள் அவதி : தோ்தல் அதிகாரியிடம் புகாா்
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்காக தரப்படும் படிவத்தை பூா்த்தி செய்ய முடியாமல், மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷை ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தாா். இதுகுறித்து அசனா செய்தியாளா்களிடம் கூறியது:
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக, வாக்குச்சாவடி அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி வருகிறாா்கள். சில பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் படிவங்களை வழங்கி வீடுகளுக்கு கொடுக்கச் செய்துள்ளனா்.
வாக்காளா்களுக்கு விளக்காமல், படிவத்தை மட்டும் தந்து செல்கின்றனா். இதை எப்படி பூா்த்தி செய்வது என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனா்.
திருத்தப் பணி நிறைவடைய குறுகிய காலம் மட்டுமே உள்ள நிலையில், மாவட்ட தோ்தல் துறை அந்தந்த வாக்குச் சாவடிகளில், வார இறுதி நாள்களில் பள்ளிகள், வாக்குச் சாவடிகளில் உரிய அலுவலா்களை நியமித்து வாக்காளா்களுக்கு உதவ ஏற்பாடு செய்யவேண்டும்
எனக் கேட்டுக்கொண்டதாக அவா் கூறினாா்.

