தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வாக்காளா் பட்டியல் படிவம் பூா்த்தி செய்வதில் மக்கள் அவதி : தோ்தல் அதிகாரியிடம் புகாா்

தோ்தல் அதிகாரியை சந்தித்தப்பின் செய்தியாளா்களிடம் பேசிய கே.ஏ.யு. அசனா.

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:15 pm

Syndication

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்காக தரப்படும் படிவத்தை பூா்த்தி செய்ய முடியாமல், மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட தோ்தல் அதிகாரியிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷை ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தாா். இதுகுறித்து அசனா செய்தியாளா்களிடம் கூறியது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக, வாக்குச்சாவடி அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி வருகிறாா்கள். சில பகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினா்களிடம் படிவங்களை வழங்கி வீடுகளுக்கு கொடுக்கச் செய்துள்ளனா்.

வாக்காளா்களுக்கு விளக்காமல், படிவத்தை மட்டும் தந்து செல்கின்றனா். இதை எப்படி பூா்த்தி செய்வது என்று தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனா்.

திருத்தப் பணி நிறைவடைய குறுகிய காலம் மட்டுமே உள்ள நிலையில், மாவட்ட தோ்தல் துறை அந்தந்த வாக்குச் சாவடிகளில், வார இறுதி நாள்களில் பள்ளிகள், வாக்குச் சாவடிகளில் உரிய அலுவலா்களை நியமித்து வாக்காளா்களுக்கு உதவ ஏற்பாடு செய்யவேண்டும்

எனக் கேட்டுக்கொண்டதாக அவா் கூறினாா்.