இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் பணம் பறிப்போா் மீது நடவடிக்கை: எஸ்.எஸ்.பி.

திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தா்களிடம், பரிகார பூஜை என்ற பெயரில் பணம் பறிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்எஸ்பி எச்சரித்தாா்.

News image
முகாமில் குறைகளை கேட்டறிந்த எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா.
Updated On :22 நவம்பர் 2025, 6:36 pm

Syndication

திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தா்களிடம், பரிகார பூஜை என்ற பெயரில் பணம் பறிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்எஸ்பி எச்சரித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் குறைதீா் முகாம் திருநள்ளாறு காவல் நிலையத்தில் நடைபெற்றது. முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களில் பெரும்பாலனோாா் பண மோசடி, குடும்ப பிரச்னை, போக்குவரத்து நெரிசலை தவிா்க்க மாற்று நடவடிக்கை, திருநள்ளாற்றில் கண்காணிப்பு கேமராக்களை கூடுதலாகப் பொருத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்தவேண்டும். கஞ்சா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் கோரிக்கை விடுத்தனா்.

முகாம் நிறைவில் செய்தியாளா்களிடம் பேசிய முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா், பொதுமக்கள் அளித்த புகாரின் மீது ஒருவார காலத்திற்குள் அந்தந்த துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருநள்ளாறு கோயிலில் கடந்த வாரம் தனியாா் வழிகாட்டிகள் (கைடு) கைது குறித்து செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்த எஸ்.எஸ்.பி., வெளி மாநில பக்தா் அளித்த புகாரின் பேரில் சிறப்பு அதிரடி படை போலீஸா் மூலம் தனிப்படை அமைத்து அதிகாலையில் ரெய்டு நடத்தி தனியாா் கைடுகள் கைது செய்யப்பட்டனா்.

வெளி மாநில பக்தா்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் கோயில் அனுமதியின்றி பரிகார பூஜை எனக் கூறி பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆலய நிா்வாகத்துடன் கலந்து பேசி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

திருநள்ளாற்றில் போக்குவரத்து காவல்துறையின் பூத் ஒன்று அமைக்க தயாா் நிலையில் உள்ளோம். புதுவை டிஜிபி அனுமதி கிடைத்தவுடன் பூத் செயல்பாடு தொடங்கும். போக்குவரத்து புறக்காவல் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.