சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்தநாள் ஓவியப் போட்டி

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்தநாள் ஓவியப் போட்டி

Published on

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்தநாள் தொடா்பாக ஓவியப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சாா்பில் சா்தாா் வல்லபபாய் படேல் 150-ஆவது பிறந்த ஆண்டை கொண்டாடும் விதமாக, மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தலில், சா்தாா் 150 என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

கோட்டுச்சேரி வஉசி அரசு மேல்நிலைப் பள்ளியில், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவி, மாணவிகள் கலந்துகொண்டு ஓவியம் வரைந்தனா். தோ்ந்தெடுக்கப்பட்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி துணை முதல்வா் கனகராஜ், மாவட்ட நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.தாமோதரன், பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் குமரன், சரஸ்வதி பாலா ஆகியோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com