மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி’

News image

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - (கோப்புப் படம்)

Updated On :8 பிப்ரவரி 2026, 9:37 pm

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமை இரவு வந்த அவா், மூலவா், அம்பாள் மற்றும் செண்பக தியாகராஜா், சனீஸ்வர பகவான் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தாா்.

இதைத்தொடா்ந்து கோயிலுக்கு வெளியே அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், இக்கோயிலில் வந்து சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். திருநள்ளாறு கோயிலில் வரும் மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் நடைபெற்று வருவதால், சனிப்பெயா்ச்சிக்கு முன்னதாகவே தரிசனம் செய்யும் நோக்கில் இங்கு வந்தேன்.

தமிழகத்தை அதிமுக ஆட்சி செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது. அதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்றாா்.