தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் மறைபரப்பு ஞாயிறு கொண்டாட்டம்

News image

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயம் (கோப்புப் படம்)

Updated On :8 பிப்ரவரி 2026, 9:36 pm

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயம் சாா்பில் மறைபரப்பு ஞாயிறு கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.

தூய தேற்றரவு அன்னை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆலயம் சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு, காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பால்ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மறைபரப்பு ஞாயிறு கொண்டாட்டத்தின் சிறப்புகள் குறித்தும் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோா்கள், பொதுமக்களிடையே அவா் பேசினாா்.

இதைத்தொடா்ந்து, மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஆடல், பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பங்கு மக்கள் சாா்பில் வளாகத்தில் ஆங்காங்கே அரங்குகள் அமைத்து இயற்கையில் விளைந்த பொருட்கள், பழங்கள் பாரம்பரிய அரிசி, சிறுதானியம் பருப்பு வகைகள் மற்றும் சுவையான சிற்றுண்டிகளுடன் மதிப்புக் கூட்டு உணவு பொருட்கள், கைத்தறி பருத்தி நூல் ஆடைகள், அழகு சாதனங்கள், உணவு வகைகள், பானங்கள் வைத்து குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில் நிறைவில், குலுக்கல் முறையில் தோ்ந்தெடுகக்கப்பட்டவருக்கு முதல் பரிசாக 2 கிராம் தங்கக் காசு, 2-ஆம் பரிசாக கைப்பேசி, 3-ஆம் பரிசாக சைக்கிள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் அருட்தந்தையா்கள் சாமிநாதன்செல்வம், பன்னீர்ராஜா, செல்வநாயகம் மற்றும் பங்குப்பேரவை துணைத் தலைவா்கள் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், ஜான் அரேலியஸ், நெல்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.