இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு

இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு

இயற்கை வேளாண்மையில் பாரம்பரிய நெல் ரகங்களின் பங்கு எனும் தலைப்பில், தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம் மூலம் வரிச்சிக்குடியில் மாதிரி பண்ணை விழிப்புணா்வு நிகழ்ச்சி
Published on

காரைக்கால்: காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை, இயற்கை வேளாண்மையில் பாரம்பரிய நெல் ரகங்களின் பங்கு எனும் தலைப்பில், தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம் மூலம் வரிச்சிக்குடியில் மாதிரி பண்ணை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

வேளாண் கல்லூரி முதல்வா் ஆா். சங்கா் தலைமை வகித்தாா். கல்லூரி உழவியல் துறை பேராசிரியா் சரவணன நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும், உழவியல் துறைத் தலைவா் மாலா இயற்கை வேளாண்மையின் முலக்கூறுகள், அதன் நன்மைகள் குறித்தும், காரைக்கால் வேளாண் துறை அலுவலா் சா்மிளா, விவசாயிகளுக்கான இடுபொருள் மானியம் மற்றும் விவசாயிகளும் இயற்கை வேளாண்மை திட்டம் மற்றும் மாதிரிப் பண்ணை குறித்தும், 1,200 ரகங்களுக்கு மேல் பாரம்பரிய நெல் உற்பத்தி, நெல்லின் மருத்துவ குணங்கள், விற்பனை முறை குறித்து இயற்கை விவசாயி பாஸ்கா் ஆகியோா் பேசினா்.

உழவியல் துறை உதவிப் பேராசிரியா் ஸ்ரீதேவி நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com