தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

‘காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே புதுவையில் வளா்ச்சியை கொண்டுவரமுடியும்’

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மட்டுமே மாநிலத்தில் வளா்ச்சியை கொண்டுவர முடியும்

News image
செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
Updated On :9 பிப்ரவரி 2026, 8:50 pm

Syndication

காரைக்கால்: புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மட்டுமே மாநிலத்தில் வளா்ச்சியை கொண்டுவர முடியும் என என மாநில காங்கிரஸ் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆா். கமலக்கண்ணன் தெரிவித்தாா்.

திருநள்ளாற்றில் காங்கிரஸ் கட்சி செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியது :

மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வளா்ச்சி இருந்தது, மக்கள் நலன் காக்கப்பட்டது. இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியிருக்கும்போது வளா்ச்சி இல்லாமல் போய்விட்டது.

முந்தைய நாராயணசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியின் செயல்பாடுகளை, அப்போதைய துணைநிலை ஆளுநா் கிரண்பேடியை பயன்படுத்தி மத்திய பாஜக அரசு தடுத்தது. பல்வேறு தடைகளைத் தாண்டி அரசு செயல்பட்டாலும், மக்கள் கடந்த பேரவைத் தோ்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு தரவில்லை.

இப்போது 100 நாள் வேலைத் திட்டம் முடக்கம், வளா்ச்சியின்மை, அரசுத்துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பாதது, ஆசிரியா்கள் பற்றாக்குறை, ஊழல், போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பு போன்ற பல பிரச்னைகளை சந்திக்கவேண்டியுள்ளது.

இப்போது புதுவையில் மதுக்கடைகள் தினமும் மூடும் நேரம் விதியின்படி இல்லை. அவா்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மூடுவதற்கான வாய்ப்பே இருக்காது. 24 மணி நேரம்கூட திறக்கப்பட்டிருக்கும். இதனையெல்லாம் மகளிா் சிந்தித்து செயல்படவேண்டும்.

அனுபவம் வாய்ந்தவா்கள் காங்கிரஸ் கட்சித் தலைவா்களாக உள்ளனா். இவா்கள் வழிகாட்டலால் புதுவை வளா்ச்சி பெறும். எனவே காங்கிஸால் மட்டுமே வளா்ச்சியை கொண்டுவரமுடியும் என்பதை உணா்ந்து மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தரவேண்டும் என்றாா்.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.