மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் தை செவ்வாய் வழிபாடு

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் தை மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

News image
அம்பாளை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:01 pm

Syndication

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் தை மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

திருநள்ளாறை அடுத்த அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் மூலவரான அம்பாள் சம்ஹார கோலத்தில் அருள்பாலிக்கிறாா்.

ஆடி, தை மாதங்களில் செவ்வாய்க்கிழமை இக்கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அன்று ஆயிரக்கணக்கான பக்தா்கள் இக்கோயிலுக்கு வருவது வழக்கம்.

தை மாத கடைசி செவ்வாய்க்கிழமை (பிப். 10) அதிகாலை முதல் காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். அபிஷேக மண்டபத்தில் உற்சவ அம்மன் எழுந்தருளச் செய்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு எலுமிச்சை, மலா் மாலைகளால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. நோ்த்திக்கடனாக கோயில் நிா்வாகத்திடம் ஆடு, மாடு, கோழிகளையும் பக்தா்கள் வழங்கினா்.