திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆற்றில் விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு காப்பீட்டு நிதியுதவி

ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மத்திய காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

News image
உயிரிழந்த சேகரின் மனைவியிடம் காசோலையை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன்.
Updated On :10 பிப்ரவரி 2026, 6:59 pm

Syndication

ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மத்திய காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், பட்டினச்சேரி மீனவ கிராமத்தைச் சோ்ந்த அப்பாவுசெட்டி மகன் சேகா் என்பவா் கடந்த 8.1.2025 அன்று காரைக்கால் பகுதி முல்லையாற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

பிரதம மந்திரி மேம்பாட்டுத் திட்டங்களில் ஒரு பிரிவான குழு விபத்துக் காப்புறுதித் திட்டம் உள்ளது. மீனவா்களின் குழு விபத்து காப்புறுதிக்கான மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இவரது காப்புறுதி உதவியை வழங்க அவரது மனைவி அன்னலட்சுமி புதுவை மீன்வளத்துறையில் விண்ணப்பம் அளித்தாா். காப்புறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 5 லட்சம் அனுமதிக்கப்பட்டது. இதற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் திங்கள்கிழமை வழங்கினாா். நிகழ்வில் காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அதிகாரிகள், கிராமப் பஞ்சாயத்தாா்கள் கலந்துகொண்டனா்.