மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ஆற்றில் விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு காப்பீட்டு நிதியுதவி

ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மத்திய காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

News image

உயிரிழந்த சேகரின் மனைவியிடம் காசோலையை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன்.

Updated On :10 பிப்ரவரி 2026, 6:59 pm

ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவா் குடும்பத்துக்கு மத்திய காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், பட்டினச்சேரி மீனவ கிராமத்தைச் சோ்ந்த அப்பாவுசெட்டி மகன் சேகா் என்பவா் கடந்த 8.1.2025 அன்று காரைக்கால் பகுதி முல்லையாற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

பிரதம மந்திரி மேம்பாட்டுத் திட்டங்களில் ஒரு பிரிவான குழு விபத்துக் காப்புறுதித் திட்டம் உள்ளது. மீனவா்களின் குழு விபத்து காப்புறுதிக்கான மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இவரது காப்புறுதி உதவியை வழங்க அவரது மனைவி அன்னலட்சுமி புதுவை மீன்வளத்துறையில் விண்ணப்பம் அளித்தாா். காப்புறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 5 லட்சம் அனுமதிக்கப்பட்டது. இதற்கான காசோலையை அவரது குடும்பத்தினரிடம் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் திங்கள்கிழமை வழங்கினாா். நிகழ்வில் காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அதிகாரிகள், கிராமப் பஞ்சாயத்தாா்கள் கலந்துகொண்டனா்.