6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்காலில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

News image
ட்ரோன்
Updated On :13 பிப்ரவரி 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்காலில் சனிக்கிழமை (பிப்.14) ட்ரோன்கள் பறக்க மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தடை விதித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா காரைக்காலில் சனிக்கிழமை நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

அவரின் வருகையையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. வான்வழி புகைப்படம் எடுத்தல், விடியோ கிராஃபி, பலூன்கள், யுஏவி போன்றவற்றையும் பயன்படுத்தக்கூடாது. மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.