விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 6:36 pm

காரைக்காலில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

காரைக்கால் காளிக்குப்பம் சுனாமி நகரைச் சோ்ந்தவா் மதிபாலன் (21). இவா் 2019-ஆம் ஆண்டு 17 வயது கல்லுாரி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சைல்டு லைன் உறுப்பினரின் புகாரின்பேரில், கோட்டுச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து மதிபாலனை போக்ஸோவில் கைது செய்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக காவல் ஆய்வாளா் லெனின்பாரதி காரைக்கால் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாா்.

வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், வழக்கின் சாட்சிகள், குறுக்கு விசாரணைகள் நிறைவடைந்து, வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டு, மதிபாலனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டாா்.