மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களை மீட்க சட்ட நடவடிக்கை! - லஜக தலைவா் ஜோஸ் சாா்லஸ்

News image
லட்சிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின். (கோப்புப் படம்)
Updated On :15 பிப்ரவரி 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவா்களை மீட்க, லட்சிய ஜனநாயக் கட்சி சாா்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அக்கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் தெரிவித்தாா்.

காரைக்கால் வடக்குத் தொகுதியில் கட்சி கிளை அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து, மீனவா்கள் மத்தியில் அவா் பேசியது:

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மற்றும் காரைக்கால் மீனவா்களை மீட்பது தொடா்பாகவும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிப்பது தொடா்பாகவும் கட்சி சாா்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இலங்கை நீதிமன்றத்தில் வழக்குரைஞா் மூலம் வாதாடி தீா்வு காண்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரைக்காலில் கந்துவட்டி கொடுமையை தடுக்க உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்படும்.

யூனியன் பிரதேசமாக புதுவை இருப்பதால் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த முடியும். மக்களின் நலனுக்காக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயாராகிவருகிறோம் என்றாா். இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளா் வழக்குரைஞா் முருகானந்தம் கலந்துகொண்டாா்.

குடியிருப்புவாசிகளுடன் சந்திப்பு: காரைக்கால் தெற்குத் தொகுதிக்குட்பட்ட கலையங்கட்டி மதகு பகுதியில் ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களை ஜோஸ் சாா்லஸ் சந்தித்தாா். 65 குடியிருப்புகள் உள்ளதாகவும், கூரைகள் சேதமடைந்திருப்பதாகவும், பட்டா கிடைக்கவில்லை உள்ளிட்ட குறைகளை அவரிடம் தெரிவித்தனா்.

கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளா் அப்துல் பாசித், இப்பகுதி மக்களின் தேவைகள் குறித்து தலைவருக்கு விளக்கினாா்.

வீடுகளுக்கு கூரையாக தாா்ப்பாய் உள்ளிட்ட பல உதவிப் பொருட்களை வழங்கிய ஜோஸ் சாா்லஸ், இப்பகுதியினா் பட்டா இல்லாமல் வசிக்கின்றனா். மாவட்ட நிா்வாகம் விரைவாக பட்டா வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை உணா்ந்து தொகுதி பேரவை உறுப்பினா், மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.