காரைக்கால்: காரைக்காலில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை (பிப். 18) தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியரின் செயலா் வித்யாதரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
புதுவை மாநில துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தலின்படி காரைக்கால் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி மாதத்திற்கான முகாம் புதன்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் காலை 9.30 முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.