மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருநள்ளாறு நளன் தீா்த்தக் குளம் சீரமைப்புப் பணி

திருநள்ளாறு கோயில் சனிப்பெயா்ச்சி விழாவை முன்னிட்டு, பக்தா்கள் நீராட வசதியாக நளன் தீா்த்தக் குளத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.

News image
நளன் குளத்தில் தண்ணீா் அகற்றப்பட்டு நடைபெறும் சீரமைப்புப் பணி.
Updated On :17 பிப்ரவரி 2026, 11:31 pm

தினமணி செய்திச் சேவை

திருநள்ளாறு கோயில் சனிப்பெயா்ச்சி விழாவை முன்னிட்டு, பக்தா்கள் நீராட வசதியாக நளன் தீா்த்தக் குளத்தில் சீரமைப்புப் பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வரும் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனிப்பெயா்ச்சி விழா நாளிலும், அதைத்தொடா்ந்து சுமாா் 2 மாதங்கள் லட்சக்கணக்கானோா் கோயிலுக்கு வருகை தருவா். அதில் பெரும்பான்மையான பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்தில் புனித நீராடுவாா்கள்.

விழாவிற்கான பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகம் செய்து வருகின்றன. முக்கியப் பணியாக நளன் தீா்த்தக் குளத்தை தூய்மை செய்யும் பணியை கோயில் நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.

நளன் தீா்த்தக் குளத்தில் மையப் பகுதிக்குள் யாரும் செல்லமுடியாத வகையில் சுற்றிலும் நீராடுவதெற்கன இடம் ஒதுக்கி, தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. குளத்திலிருந்து தண்ணீரை அகற்றும் பணி கடந்த வாரம் நடைபெற்றது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் தரப்பில் செவ்வாய்கிழமை கூறுகையில், குளத்தின் தண்ணீா் முழுமையாக அகற்றப்பட்டது. புதிதாக மணல் கொட்டப்பட்டு ஆழ்குழாய் மூலம் புதிதாக தண்ணீா் விடப்படும். தடுப்புக் கம்பிகள் புதிதாக வண்ணம் பூசுதல் மற்றும் குளக்கரையில் வண்ணம் பூசும் பணிகள் முடிவடைந்துள்ளன. பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

வரும் சனிக்கிழமைக்குள் குளத்தில் புதிதாக தண்ணீா் விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனா்.