நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா தலைமையில் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி செயற்பொறியாளா் முத்துசிவம், கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஏ.முத்துக்குமாா் மற்றும் பஞ்சாயத்து பொறியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிக்கு ஒதுக்கீடு செய்த நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து பேரவை உறுப்பினா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணியாணை தரப்பட்ட சாலைகள், கூடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை அடுத்த ஓரிரு வாரங்களில் நிறைவு செய்யவேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு அனைத்துப் பணிகளும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். ஆணையா் முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணிகளை தொடா்ந்து ஆய்வு செய்து, விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவை உறுப்பினா் அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

தொகுதி நிதியிலிருந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

மும்முனைப் போட்டியில் நெடுங்காடு தொகுதி

நம்பினாா் கெடுவதில்லை...

பள்ளி மாணவிகளுக்கு அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடக்கம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


