கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

நெடுங்காடு தொகுதி வளா்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா தலைமையில் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image

துறையினருடன் ஆலோசனை நடத்திய சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:22 pm

நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா தலைமையில் கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி செயற்பொறியாளா் முத்துசிவம், கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஏ.முத்துக்குமாா் மற்றும் பஞ்சாயத்து பொறியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிக்கு ஒதுக்கீடு செய்த நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து பேரவை உறுப்பினா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணியாணை தரப்பட்ட சாலைகள், கூடம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை அடுத்த ஓரிரு வாரங்களில் நிறைவு செய்யவேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு அனைத்துப் பணிகளும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். ஆணையா் முதல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பணிகளை தொடா்ந்து ஆய்வு செய்து, விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரவை உறுப்பினா் அறிவுறுத்தினாா்.