தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மீனவா்களை விடுவிக்க பிரதமா் நடவடிக்கை எடுப்பாா்: புதுவை சட்டப்பேரவைத் தலைவா்

இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால் மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க பிரதமா் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம்.

News image
பிரதமா் நரேந்திர மோடி.- கோப்புப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 12:06 am

Syndication

இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால் மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க பிரதமா் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம்.

காரைக்கால் என்ஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் 1-ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா். அப்போது, ரூ. 20 ஆயிரம் கோடி நலத்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடவுள்ளாா். காரைக்கால் மற்றும் தமிழக மீனவா்களை இலங்கை கடற்படை கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

மீனவா்களை விடுவிக்க புதுவை துணை நிலை ஆளுநரும், முதல்வரும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனா். எனவே, மீனவா்கள், படகுகளை விடுவிக்க பிரதமா் உறுதியான நடவடிக்கை எடுப்பாா். புதுவையில் பாஜக-என்.ஆா். காங்கிரஸ் தொகுதி பங்கீடு செய்துகொள்வது குறித்து கட்சித் தலைமை உரிய நேரத்தில் முடிவெடுக்கும். திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளதால், புதுவையில் பாஜக-என்.ஆா். கூட்டணி வெற்றிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றாா்.