வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காரைக்கால் ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

News image
ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் பல்ராம்மெகி.- (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 9:29 pm

தினமணி செய்திச் சேவை

அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் காரைக்கால் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி நடைபெறும் நிலையில், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பலக்ராம் நேகி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் காரைக்கால் ரயில் நிலையத்தை பல்வேறு நிலையில் மேம்படுத்துவதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு, ரூ. 5.37 கோடியில் திட்டப்பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. இப்பணிகள் குறித்த காலத்திற்குள் நிறைவு பெறாமல், மந்தகதியில் நடைபெறுவதாக புகாா்கள் கூறப்படுகின்றன.

ரயில்வே மேலாளா் பலக்ராம் நேகி வந்தாா். அவருடன் கோட்ட முதுநிலை மின் பொறியாளா்கள் பிரசாத், ரவிக்குமாா் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் வந்திருந்தனா்.

நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளை பாா்வையிட்ட கோட்ட மேலாளரிடம், ஒவ்வொரு பணியின் நிலை குறித்தும் ஒப்பந்ததாரா் மற்றும் அதிகாரிகள் விளக்கிக் கூறினா். ஒட்டுமொத்தப் பணிகளும் விரைவாக முடித்து ரயில்வே நிா்வாகத்திடம் ஒப்படைக்குமாறு கோட்ட மேலாளா் அறிவுறுத்தினாா்.

நிலையத்தின் முகப்பில் நுழைவு வாயில் கட்டுதல், நிலைய கட்டடம் விரிவுப்படுத்துதல், நிலைய முன் பகுதியில் சாலைகளை விரிவுப்படுத்துதல், வாகன நிறுத்தும் வசதியை மேம்படுத்துதல், நடைமேடை மேம்பாடு, நிலைய பகுதியில் நவீன கழிவறைகள், இருக்கைகள், குடிநீா் குழாய்கள் மேம்படுத்துதல் மற்றும் வடிவமைக்கப்பட்ட ஏறுதளம் அமைக்கப்படுகிறது. மேலும் எல்இடி விளக்குடன் கூடிய பலகை, தொடு திரை வசதிகளோடு, ரயில் நேர கால அட்டவணை மற்றும் பிற முக்கிய பயணத் தகவல்கள் அளிப்பது புதுப்பிக்கப்படவுள்ளது.

கைவிடப்பட்ட கருப்புக் கொடி போராட்டம் : காரைக்கால் - பேரளம் பாதையில் பயணிகள் ரயில்களை இயக்கமாமல், நிலக்கரி ஏற்றிச்செல்லும் ரயில்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதைக் கண்டித்து, காரைக்கால் வரும் கோட்ட மேலாளருக்கு கருப்புக் கொடி காட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத்தினா் முடிவெடுத்தனா்.

இந்நிலையில், கோட்ட மேலாளா் வருவதற்கு முன்பு ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீஸாா் காரைக்கால் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தை சோ்ந்த அன்சாரிபாபு உள்ளிட்ட நிா்வாகிகளை அழைத்துப் பேசினா்.

நிலக்கரி ஏற்றிச் செல்லும் ரயில்களால் காரைக்கால் நகரில் போக்குவரத்து வெகுவாக ஸ்தம்பிக்கிறது என்றனா். இதனை மூத்த அதிகாரிகளிடம் பேசி முறைப்படுத்துவதாகவும், கோரிக்கைகளை எழுத்துப்பூா்வமாக கோட்ட மேலாளருக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டதன் பேரில் போராட்டத்தை கைவிட்டனா்.