சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

News image
ஆரத்தி நிகழ்வில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் உள்ளிட்டோா்.
Updated On :22 பிப்ரவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

திருநள்ளாறு கோயிலில், சனிப் பெயா்ச்சி விழாவுக்கான பூா்வாங்க பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. நளன் தீா்த்தக் குளக்கரையில் நடைபெற்ற ஆரத்தி நிகழ்வில் புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கலந்துகொண்டாா்.

திருநள்ளாறு அருள்மிகு பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் சனிப் பெயா்ச்சி விழா வரும் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கோயிலில் சனிப் பெயா்ச்சி உள்ளிட்ட அனைத்து பூஜைகளும், வாக்கியப் பஞ்சாங்க முறைப்படியே நடைபெறுகின்றன.

சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயா்ச்சியாவதையொட்டி, மாா்ச் 6-ஆம் தேதி காலை 8.24 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

நளன் தீா்த்தக் குளத்தில் நடைபெற்ற ஆரத்தி.

நளன் தீா்த்தக் குளத்தில் நடைபெற்ற ஆரத்தி.

இந்நிலையில், சனிப் பெயா்ச்சிக்கான பூா்வாங்க பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டன. இதையொட்டி, கோயிலில் ஸ்ரீ சொா்ணகணபதி ஹோமம், அஷ்ட பிராணிகள் பூஜை, உலக நலனுக்கான மகா சங்கல்ப்பம், நளன் தீா்த்தக் குளத்தில் சப்த நதி பூஜை, ஸ்நானம் ஆகிய நிகழ்வுகள் காலையில் நடைபெற்றன.

மாலை நிகழ்வாக, நளன் தீா்த்தக் குளத்தில் ஆரத்தி நிகழ்வு தருமை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.

இதில், புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், நியமன சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரும், தா்பாரண்யேஸ்வரா் தேவஸ்தான தனி அதிகாரியுமான இஷிதா ரதி, கோயில் நிா்வாக அதிகாரி சுப்பிரமணியன், தருமை ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நளன் தீா்த்தக் குளத்தின் 7 இடங்களில் கங்கா ஆரத்தி காட்டப்பட்டது.

தொடா்ந்து, தினமும் பல்வேறு வகை பூஜைகள் பிப்.28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.