மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருநள்ளாறு கோயிலில் ஏகாதச ருத்ர ஜபம்

திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயா்ச்சி பூா்வாங்க பூஜையாக ஏகாதச ருத்ர ஜபம் உள்ளிட்ட ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தா்பாரண்யேஸ்வரா் சந்நிதியில் சிவாச்சாரியா்கள் நடத்திய ருத்ர ஜபம்.

Updated On :23 பிப்ரவரி 2026, 8:38 pm

காரைக்கால்: திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயா்ச்சி பூா்வாங்க பூஜையாக ஏகாதச ருத்ர ஜபம் உள்ளிட்ட ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி பூா்வாங்க பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. 2-ஆம் நாளான திங்கள்கிழமை காலை தா்பாரண்யேஸ்வரா் சந்நிதி முன் மஹன்யாச புரஸ்ஸர, ஏகாதச ருத்ர ஜபம், பஞ்சாட்சர ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

சிவாச்சாரியா்கள் சுமாா் 2 மணி நேரம் மந்திரங்கள் கூறி, ஹோம பூா்ணாஹூதி நடத்தினா். இதைத்தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை, செண்பக தியாகராஜரை மையப்படுத்தி இந்த வழிபாடு நடைபெற்றது. மாலை நிகழ்வாக, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா் பிரகாரப் புறப்பாடு நடைபெற்றது.