மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு: கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image

அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:38 pm

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் மறு சீரமைப்பாக வாக்குச்சாவடியில் பெயா் மாற்றம் செய்யப்படவுள்ளவை, வாக்குச்சாவடி கட்டட இடா்பாடுகள் உள்ளவை பட்டியலிடப்பட்டுள்ளன.

இவை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் முன்னிலையில் வைக்கப்பட்டு அவா்களின் கருத்து கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி தலைமையில் சாா் ஆட்சியரும் வாக்குப்பதிவு அதிகாரியமான எம். பூஜா, வாக்குப்பதிவு அதிகாரி கே. அருணகிரிநாதன், மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி.செந்தில்நாதன் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அதிகாரிகளான பொய்யாத மூா்த்தி, சண்முகானந்தம், சுரேஷ், ரமேஷ் கலந்துகொண்டனா்.

தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஆலோசனைகளை தெரிவித்தனா்.