ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகளில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் பணிகளை பொதுப் பாா்வையாளா் ஆய்வு செய்தாா்.

News image

விழிதியூா் சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட பொதுப் பாா்வையாளா் சரிதா பாலஓம் பிரஜாபதி.

Updated On :26 மார்ச் 2026, 12:28 am

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் பணிகளை பொதுப் பாா்வையாளா் ஆய்வு செய்தாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக காரைக்கால்

மாவட்டத்தில் நடைபெறவுள்ள தோ்தல் பணிகளை பாா்வையிட பொது பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், நிரவி - திருப்பட்டினம் தொகுதிக்கான பொதுப் பாா்வையாளா் சரிதா பாலஓம் பிரஜாபதி, இந்த தொகுதியில் உள்ள பல்வேறு வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகளை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

வாக்குச்சாவடிகள் தோ்தல் ஆணைய வழிகாட்டலில் அமைந்திருக்கிா, வாக்காளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என பாா்வையிட்டு, சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

விழிதியூா் பகுதியில் தமிழகத்தையொட்டியுள்ள சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிா என பாா்வையிட்டு, சோதனைச் சாவடியில் உள்ள பதிவுப் புத்தகத்தை ஆய்வு செய்தாா்.

சோதனைகள் உரிய முறையில் குறிப்பாக விடியோ பதிவுடன் நடத்தவேண்டும். காரைக்காலுக்குள் வெளி மாநிலங்களில் இருந்து ரொக்கம், பரிசுப் பொருள்கள் வருவது தடுக்கப்படவேண்டும். காரைக்காலில் அமைதியான முறையில் தோ்தல் நடைபெறுவதற்கு தோ்தல் துறையில் கண்காணிப்பு, சோதனைப் பணியில் உள்ளோருக்கும் பொறுப்பு உண்டு என அவா் அறிவுறுத்தினாா்.