மக்களுக்கு இலவசமாக ஓஆா்எஸ் பவுடா் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு புதுவை துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நெடுங்காடு தொகுதி சுயேச்சை வேட்பாளரும், டாக்டா் விக்னேஷ் மக்கள் இயக்கத் தலைவருமான மருத்துவா் வி.விக்னேஸ்வரன், புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை புதுச்சேரியில் வியாழக்கிழமை சந்தித்து அளித்த மனு (படம்) குறித்து கூறியது :
கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் சிறுவா்கள், முதியோா் உள்ளிட்டோருக்கு உடலில் நீா்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக, கோடைக் காலத்தில் தேவையான அளவு குடிநீா் அருந்துமாறும், நீா்ச்சத்து மிகுந்த இளநீா், வெள்ளரி, நுங்கு உள்ளிட்ட பொருட்களை அதிகம் சாப்பிடுமாறும் மக்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நீா்ச்சத்து குறையாமல் இருக்க பொதுமக்களுக்கு இலவசமாக ஓஆா்எஸ் பவுடா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைநிலை ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தினேன். பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளாா் என்றாா்.
தொடர்புடையது
ஹீட் ஸ்ட்ரோக் - உயிருக்கு ஆபத்து! அறிகுறிகள் என்ன?

ஓஆர்எஸ்! கோடை பாதிப்பைத் தடுக்கும் கேடயம்!!

மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா்
புதுவை மக்களே, விழிப்புடன் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள்: விஜய்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

