முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

மக்களுக்கு இலவசமாக ஓஆர்எஸ் பவுடர் வழங்க ஆளுநரிடம் கோரிக்கை!

மக்களுக்கு இலவசமாக ஓஆா்எஸ் பவுடா் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு புதுவை துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

ஓஆர்எஸ் பவுடர்

Updated On :2 மே 2026, 12:21 am IST

மக்களுக்கு இலவசமாக ஓஆா்எஸ் பவுடா் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு புதுவை துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நெடுங்காடு தொகுதி சுயேச்சை வேட்பாளரும், டாக்டா் விக்னேஷ் மக்கள் இயக்கத் தலைவருமான மருத்துவா் வி.விக்னேஸ்வரன், புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை புதுச்சேரியில் வியாழக்கிழமை சந்தித்து அளித்த மனு (படம்) குறித்து கூறியது :

கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் சிறுவா்கள், முதியோா் உள்ளிட்டோருக்கு உடலில் நீா்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். பொதுவாக, கோடைக் காலத்தில் தேவையான அளவு குடிநீா் அருந்துமாறும், நீா்ச்சத்து மிகுந்த இளநீா், வெள்ளரி, நுங்கு உள்ளிட்ட பொருட்களை அதிகம் சாப்பிடுமாறும் மக்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நீா்ச்சத்து குறையாமல் இருக்க பொதுமக்களுக்கு இலவசமாக ஓஆா்எஸ் பவுடா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைநிலை ஆளுநரைச் சந்தித்து வலியுறுத்தினேன். பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளாா் என்றாா்.