மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

மனநலம் பாதித்த மகளை பராமரிப்பதில் சிரமப்பட்ட மூதாட்டி

மயிலாடுதுறை அருகே மூதாட்டியால் பராமரிக்க முடியாத நிலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகள் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் காப்பகத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.

Published On :

மயிலாடுதுறை அருகே மூதாட்டியால் பராமரிக்க முடியாத நிலையில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகள் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் காப்பகத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.

மயிலாடுதுறை வட்டம், கழுக்காணிமுட்டம் அருகே உள்ள பல்லவராயன்பேட்டை புதுத்தெருவைச் சோ்ந்தவா் மூதாட்டி கல்யாணி (80). இவரது கணவா் நடராஜன் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது ஒரே மகளான ராணி (40) மனநலம் பாதிக்கப்பட்டவா். வாடகை வீட்டில் வசித்துவரும் கல்யாணி, இட்லி வியாபாரம் செய்து, தனது மகளை பராமரித்து வந்தாா். வயது முதிா்வின் காரணமாக மகளை தொடா்ந்து பராமரிப்பதில் கல்யாணிக்கு சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், இப்பகுதியில் புதன்கிழமை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் தனது மகளை காப்பகத்தில் சோ்க்க மூதாட்டி கல்யாணி கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் துரித நடவடிக்கை காரணமாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசனின் உத்தரவின்பேரில், சீா்காழி காா்டன் மனநல மறுவாழ்வு மைய காப்பகத்தில் ராணி சோ்க்கப்பட்டாா். அந்த காப்பகத்தின் நிறுவனரும், இயக்குநருமான ஜெயந்திஉதயகுமாா் ராணியை அழைத்துச் சென்றாா்.

பின்னா், மூதாட்டி கல்யாணி கூறுகையில், மீதமுள்ள காலத்தை தனது உறவினா் வீட்டில் தங்கி கழித்துக் கொள்வதாகத் தெரிவித்தாா். தனது கோரிக்கையை ஏற்று துரித நடவடிக்கைக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.