இந்நிலையில், சீா்காழி அருகே நிம்மேலி - நெப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியா், சட்டநாதபுரம் பகுதியைச் சோ்ந்த சு. சீனிவாசன் (53), தங்கள் பள்ளி மாணவா்களின் கற்றல் பாதிக்கப்படாமல் இருக்க புதிய உத்தியை கையாண்டு வருகிறாா். இவா், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக, சக்கர நாற்காலியில் 32 இன்ச் அளவுள்ள நவீன தொலைக்காட்சிப் பெட்டி, ஒலிபெருக்கி, இணையவசதி, பாடங்கள் அடங்கிய பென்டிரைவ் ஆகியவற்றை தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்து, தங்கள் பள்ளியில் 1- 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் இருக்கும் பகுதிக்குச் சென்று பாடம் நடத்திவருகிறாா்.