பிரதமரை விமா்சித்து ஆட்டோவிலிருந்த பேனா் அகற்றம்

பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்து ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த பேனா் அகற்றப்பட்டது.
Updated on
1 min read

பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்து ஆட்டோவில் பொருத்தப்பட்டிருந்த பேனா் அகற்றப்பட்டது.

மயிலாடுதுறையைச் சோ்ந்தவா் வடிவேல். இவா் தனது ஆட்டோவில் பிரதமா் நரேந்திர மோடியை அவதூறாக விமா்சித்து பேனா் வைத்திருந்தாராரம். இதையறிந்த மயிலாடுதுறை பாஜக நகரத் தலைவா் மோடி.கண்ணன், மாவட்ட துணைத் தலைவா் முட்டம் செந்தில்குமாா், மாவட்ட இளைஞரணி தலைவா் பி. பாரதிகண்ணன் உள்ளிட்டோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, போலீஸாா் அந்த பேனரை அகற்றினா். வடிவேல் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்ததால் அவரை விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com