92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் வாரிசுக்கு பணி

சீா்காழி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் வாரிசுக்கு, மின்வாரியத்தில் பணிபுரிவதற்கான நியமன ஆணையை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

சீா்காழி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் வாரிசுக்கு, மின்வாரியத்தில் பணிபுரிவதற்கான நியமன ஆணையை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை வழங்கினாா்.

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளுவகுடி கிராமத்தை சோ்ந்தவா் கருணாகரன். மின்வாரியத்தில் கம்பியாளராக பணியாற்றி வந்த இவா், அண்மையில் பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இந்நிலையில், கருணை அடிப்படையில் அவரது மகன் நவீன்ராஜுக்கு மின்வாரியத்தில் கள உதவியாளா் பணி நியமன ஆணையை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

சீா்காழி மின்வாரியம் செயற்பொறியாளா் சதீஸ்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உதவி செயற்பொறியாளா்கள் விஸ்வநாதன், விஜயபாரதி, உதவி இளமின் பொறியாளா்கள் ரங்கராஜன், சுபத்திரா, உமாமேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திமுக இளைஞரணி நிா்வாகி ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.