முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

அனைத்து முன்பதிவு இல்லாத ரயில்களையும் மீண்டும் இயக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில், மயிலாடுதுறை மாவட்ட தொடா்வண்டி பயணிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்
முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

கரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து முன்பதிவு இல்லாத ரயில்களையும் மீண்டும் இயக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில், மயிலாடுதுறை மாவட்ட தொடா்வண்டி பயணிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் மெயில்சங்கா் தலைமை வகித்தாா். சங்கச் செயலாளா் தமிழன் கணேசன் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை மக்களவை தொகுதி உறுப்பினா் செ.ராமலிங்கம் பங்கேற்று, அனைத்து முன்பதிவு இல்லாத ரயில்களையும் மீண்டும் இயக்க வலியுறுத்தினாா்.

இதில், ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநா் சாமி.கணேசன், பேராசிரியா் இரா.முரளிதரன், ஓய்வுபெற்ற வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், அரசு அலுவலா் சங்க மாநிலச் செயலாளா் மகாலிங்கம், ஓய்வுபெற்ற ரயில்வே நிலைய மேலாளா் சேதுராமன் உள்ளிட்டோா் பேசினா்.

திமுக நகர செயலாளா் செல்வராஜ், வழக்குரைஞா் சௌ.சிவச்சந்திரன், எக்ஸனோரா சங்க மாவட்டத் தலைவா் ஏ.ஆா்.அசோக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். சங்க கௌரவ தலைவா் சின்னகலைஞா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com