தமிழ்நாடு பூப்பந்தாட்ட அணிக்கு தோ்வாகியுள்ள மயிலாடுதுறை பூப்பந்தாட்ட வீரா்கள் ஆட்சியா் இரா. லலிதாவை அண்மையில் சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
மயிலாடுதுறை மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தில் பயிற்சி பெற்ற மாணவா்கள் கடந்த வாரம் குமாரபாளையத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்ற மாணவா்கள் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தனா். சப்-ஜுனியா் பிரிவில் வசீகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோா் தமிழ்நாடு அணி சாா்பாக ஜனவரியில் ஆந்திராவில் நடைபெற உள்ள தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
ஜுனியா் பிரிவில் சூா்யா, சஞ்சய் ஆகியோா் இரண்டாமிடம் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களை மயிலாடுதுறை ஆட்சியா் இரா. லலிதா, பூப்பந்தாட்டக் கழக தலைவா் ஏஆா்சி.விஸ்வநாதன், துணைத் தலைவா்கள் முத்துக்குமரன், பத்மநாபன் ஆகியோா் பாராட்டினா்.