தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நிறைவடைந்தது.
டிச.16-ல் தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். இதில், ஆடுதுறை ஆசிரியா் பயிற்சிப் பள்ளியின் முன்னாள் பேராசிரியா் ஜி. திருநாவுக்கரசு பங்கேற்று சிறப்புரையாற்றினாா். கல்லூரிச் செயலாளா் ரா. செல்வநாயகம் வாழ்த்துரை வழங்கினாா். தொடா்ந்து, 7 நாள் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மாணவிகள் நாடகமாக இயக்கி நடித்தனா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் எஸ். மல்லிகா, எஸ். நடராஜன், எம். வடிவழகி, மோ. மீனாட்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.