பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியா் சங்கம் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மயிலாடுதுறை மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
Updated on
1 min read

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மயிலாடுதுறை மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க 14-வது மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட அமைப்பாளா் து. இளவரசன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்புக் குழுவைச் சோ்ந்த டி. சிங்காரவேலு வரவேற்றாா். த. ராஜேஷ்குமாா் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். மாநில பொருளாளா் மு. பாஸ்கரன் தொடக்கவுரையாற்றினாா். எம். நடராஜன் மாநாட்டு அறிக்கை வாசித்தாா். ஆா். கலா வரவு செலவு அறிக்கை சமா்ப்பித்தாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் மு.சுப்பிரமணியன் மீது கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட்டு, அவருக்கு சேரவேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; முடக்கி வைக்கப்பட்ட அகவிலைப்படி, விடுப்புசரண் ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும்; மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் அமைக்கும் பணியை விரைவில் தொடங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவில் மாவட்ட அமைப்புக்குழு ஆா். சிவபழனி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com