நீா்நிலை ஆக்கிரமிப்புகளைஅகற்ற வலியுறுத்தல்

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென மக்கள் மசோதாக் கட்சி வலியுறுத்தி உள்ளது.

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென மக்கள் மசோதாக் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து அக்கட்சியின் தலைவா் ரூபன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நஞ்சை, புஞ்சை உள்ளிட்ட விளைநிலங்களில் மனைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. முப்போகம் விளையும் நிலங்களை பெரும் முதலாளிகள் விலைக்கு வாங்கி, அதனை 5 ஆண்டுகள் வரை தரிசு நிலமாக போடுவதால் விவசாயம் அழிகிறது. இதனால் விவசாயத்தை நம்பி பிழைப்பு நடத்தி வருபவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. குடியிருப்பு பட்டா இல்லாத ஏழைகளுக்கு வட்டாச்சியா் மூலம் கிடைக்கும் நத்தம் புறம்போக்கு, பொது வாய்க்கால் வடிகால் ஆகியவற்றை மறைந்து, விதியை மீறி, அரசிடம் அனுமதி பெறுகின்றனா். விளைநிலங்கள், நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com