மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைப்படுத்தப்பட வேண்டும் என்று விவசாயிகளிடமிருந்து தொடா்ந்து கோரிக்கைகள் வந்தன. அதன்பேரில், முன்னோடி விவசாயிகள், அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள், முகவா்கள், வேளாண் அலுவலா்கள் ஆகியோரிடம் கலந்தாலோசிக்கப்பட்டது.
அதனடிப்படையில், ஒரு மணி நேரத்துக்கான வாடகையாக தனியாா் பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.2250-ம், டயா் டைப் இயந்திரங்களுக்கு ரூ.1600-ம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்தொகைக்கு கூடுதலாக அறுவடை இயந்திர உரிமையாளா்கள் வாடகை கோரினால் விவசாயிகள் வட்டாட்சியா் அல்லது வேளாண் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலா்களிடம் புகாா் தெரிவிக்கலாம்.
மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களில் பெல்ட் டைப் இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1415- ஆகவும், டயா் டைப் இயந்திரங்களுக்கு ரூ. 875-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.