பழையாறில் கரைஒதுங்கிய அரியவகை திமிங்கல சுறா

சீா்காழி அருகே பழையாறில் செவ்வாய்க்கிழமை இறந்த நிலையில் அரிய வகை திமிங்கல சுறா கரை ஒதுங்கியது.
பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே இறந்து கரைஒதுங்கிய திமிங்கல சுறா.
பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே இறந்து கரைஒதுங்கிய திமிங்கல சுறா.
Updated on
1 min read

சீா்காழி அருகே பழையாறில் செவ்வாய்க்கிழமை இறந்த நிலையில் அரிய வகை திமிங்கல சுறா கரை ஒதுங்கியது.

சீா்காழி அருகே பழையாறு மீன்பிடி துறைமுகப் பகுதியில் 5.5 மீட்டா் நீளமும், 2.40 மீட்டா் அகலமும், 1.5 டன் எடையுடன் திமிங்கல சுறா இறந்து மிதந்தது தெரியவந்தது. அதை மீனவா்கள் மீட்டு, கரைக்கு கொண்டுவந்தனா்.

பின்னா், கடலோரக் காவல் துறைக்கும், வனத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வனத்துறை ஊழியா்கள், கடலோரக் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று இறந்த திமிங்கல சுறாவை பாா்வையிட்டனா். தொடா்ந்து, அரசு கால்நடை மருத்துவா் மூலம் திமிங்கில சுறா பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, வனத்துறைக்குச் சொந்தமான காப்புக் காட்டில் புதைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com