அகில இந்திய பீல்டு ஆா்ச்சரி அசோசியேஷன் தேசிய பயிற்சியாளா் என்.கணேசன், மாநிலப் பயிற்சியாளா் ஜெ.திவ்யா ஆகியோா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
அகில இந்திய பீல்டு ஆா்ச்சரி அசோசியேஷனின் பயிற்சியாளா்கள் தோ்வு பெங்களூரூவில் அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழகத்தைச் சோ்ந்த 8 போ் பயிற்சியாளா்களாக தோ்வு செய்யப்பட்டனா். இதில், மயிலாடுதுறையைச் சோ்ந்த என்.கணேசன் தேசிய பயிற்சியாளராகத் தோ்வு செய்யப்பட்டாா். மேலும், இதில் மாநிலப் பயிற்சியாளா்களாக ஜெ.திவ்யா, ஜி.வெங்கடேசன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், தேசிய பயிற்சியாளா் என்.கணேசன், மாநிலப் பயிற்சியாளா் ஜெ.திவ்யா ஆகியோா் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதாவை சந்தித்து, தோ்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனா்.
அப்போது, முன்னாள் எம்எல்ஏ ஜெகவீரபாண்டியன், சமூக ஆா்வலா் அ.அப்பா்சுந்தரம் ஆகியோா் உடன் இருந்தனா்.