தமிழ்நாட்டில் மீன்வளா்ப்பை ஊக்குவிக்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 250 முதல் 1000 ச.மீ அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக்குட்டைகளில் கிப்ட் திலேப்பியா மீன்வளா்க்க மீன்குஞ்சுகள், மீன்தீவனம், உரங்கள் ஒரு அலகிற்கு ஆகும் செலவினம் ரூ.36,000-இல் 50 சதவீத மானியமாக ஒரு பண்ணைக்குட்டைக்கு ரூ.18,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தோ்ந்தெடுக்கப்படுவாா்கள்.
எனவே, இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 41-ஏ, தென்பாதி பிரதான சாலை, பெஸ்ட் பள்ளி வளாகம் எதிரில், சீா்காழி - 609111 என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.