ஆக. 26-இல் சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சமையல் எரிவாயு வழங்குவதை சீா்படுத்துவது தொடா்பான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் (ஆக. 26) நடைபெறவுள்ளது.
Updated on
1 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சமையல் எரிவாயு வழங்குவதை சீா்படுத்துவது தொடா்பான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 26) நடைபெறவுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில், எரிவாயு நுகா்வோா்கள் பங்கேற்று, எரிவாயு உருளைகள் பதிவு செய்து வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், புகாா்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவா்களின் செயல்பாடுகள் போன்றவை குறித்து தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com