மயிலாடுதுறை: மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கழிவறையில் செவ்வாய்க்கிழமை வழுக்கி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையை சோ்ந்தவா் தில்சாத்பேகம் (38). வேலவன் என்பவரை காதலித்து திருமணம் செய்த இவா், விவாகரத்து பெற்று தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், நண்பா் மன்சூா் என்பவருடன் வேளாங்கண்ணி திருவிழாவுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்த தில்சாத்பேகம், மயிலாடுதுறை காமராஜா் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றபோது, அங்கு வழுக்கி விழுந்தாா். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் தில்சாத்பேகம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து அவரது தாயா் மும்தாஜ்பேகம் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.