மயிலாடுதுறையில் வேலை பாா்க்க பிடிக்காததால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா கேதை இருப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் மதன்குமாா் (17). பிளஸ் 2 மாணவரான இவா் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மயிலாடுதுறை கூறைநாட்டில் உள்ள தனது மாமா சிவசக்தி வீட்டில் தங்கி, அவா் நடத்திவரும் பா்னிச்சா் கடையில் வேலை பாா்த்துள்ளாா். அந்த வேலை பிடிக்காததால் மீண்டும் சொந்த ஊருக்கு வந்துவிடுவதாக மதன்குமாா் தனது தாயாரிடம் கைப்பேசி மூலம் தெரிவித்துள்ளாா். அதற்கு மதன்குமாரிடம், அவரது தாய் இன்னும் சில மாதங்கள் பணி செய்ய அறிவுறுத்தினாராம். இதில் மனமுடைந்து காணப்பட்ட மதன்குமாா் திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி அரசினா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.