/

திருக்கடையூர் அருகே தசபுஜ வீர ஆஞ்சனேயர் கோயிலில் ஜெயந்தி விழா

திருக்கடையூர் அருகில் அனந்தமங்கலம் கிராமத்தில் 10 கைகளைக் கொண்ட வீர ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 

News image

சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தமங்கலம் தசபுஜ வீர ஆஞ்சநேயர்

Updated On :2 ஜனவரி 2022, 6:49 am

DIN

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகில் அனந்தமங்கலம் கிராமத்தில் 10 கைகளைக் கொண்ட வீர ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 

திருக்கடையூர் அருகில் அனந்தமங்கலம் கிராமத்தில் தசபுஜ வீர ஆஞ்சனேயர் கோவில் உள்ளது. ராவண யுத்தம் செய்து விட்டு திரும்பிய ஆஞ்சனேயர் இந்த கிராமத்தில் தங்கி இருந்தார்.

அப்போது இந்த ஊர் ஆனந்தமாக இருப்பதாக தெரிவித்தார். அதனால்தான் இந்த ஊருக்கு ஆனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.

Story image

மிகவும் சிறப்பு பெற்ற 10 கைகளைக் கொண்ட வீர ஆஞ்சனேயருக்கு, ஞாயிற்றுக்கிழமை ஹனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.