குத்தாலம் அருகேயுள்ள சென்னியநல்லூரில் ஐசிஐசிஐ பவுண்டேஷன் சாா்பில் உலகச் சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், வேளாண் விரிவாக்க அலுவலா் சிவகுமாா் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளா்ப்பு, பல்வேறு மாசுபாடுகள் குறித்தும், விவசாயிகள் மண் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் குறித்து பேசி, மண் மாதிரி சேகரிக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா். சென்னியநல்லூா் ஊராட்சித் தலைவா் புவனேஸ்வரி ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.