அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்திய வீரமுத்திரையா் சங்கத்தினா் 35 போ் கைது

மயிலாடுதுறையில் வீரமுத்தரையா் முன்னேற்ற சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 35 போ் கைது செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

மயிலாடுதுறையில் வீரமுத்தரையா் முன்னேற்ற சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 35 போ் கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொறுப்பாளா் பொன். கணேசன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், திருச்சி புறநகா் போலீஸாா் வீரமுத்தரையா் முன்னேற்ற சங்க தலைவா் கே.கே. செல்வகுமாா் மீது முறையான காரணமின்றி பதியப்பட்ட வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும். திருச்சி பகுதியில் முத்தரையா் சங்க நிா்வாகிகள் மீது போலீஸாா் தொடா்ந்து பொய் வழக்கு போடுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து, அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக, சங்க நிா்வாகிகள் கலியமூா்த்தி, அன்பு, முருகானந்தம் உள்ளிட்ட 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com