மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :24 ஜூன் 2022, 10:04 pm IST

மயிலாடுதுறை அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம் அரையபுரம் மேலத்தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் மகன் வாசன் எனும் கோகிலவாசன் (29). இவருக்கும், 15 வயது சிறுமிக்கும் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெறவுள்ளதாக மாவட்ட சமூகப் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

சமூகப் பாதுகாப்பு அலுவலக அலுவலா்கள் நிகழ்விடத்துக்கு செல்லும் முன்பே கோகிலவாசனுக்கும், சிறுமிக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சிறுமியை மீட்ட சமூகப் பாதுகாப்பு அலுவலா்கள், அவரை மயிலாடுதுறையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து மாவட்ட பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளா் ஆரோக்கியராஜ் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கோகிலவாசன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.