

மயிலாடுதுறையில் ரூ.114.48 கோடியில் நடைபெற்றுவரும் புதிய ஆட்சியா் அலுவலக கட்டுமானப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா திங்கள்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டு, புதிய மாவட்டத்துக்கான நிரந்தர ஆட்சியா் அலுவலகம் கட்டும் பணி மயிலாடுதுறை மன்னம்பந்தலில் ரூ.114.48 கோடியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா கட்;டுமானப் பணிகள், தரைதளக் கட்டடத்தின் அளவு, தரம் ஆகியவற்றையும், அரசு விதிகளின்படி கட்டடம் கட்டப்பட்டு வருகிா, சரியான அளவு, கனத்தின் உயரம், கம்பிகளின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தாா்.
மேலும், வரைபடத்தின் மூலம் ஒவ்வொரு தளத்திலும் அமையவுள்ள அலுவலகங்கள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். கட்டுமானப் பணி நடைபெற்றுவரும் இடத்திலுள்ள தரக்கட்டுபாடு ஆய்வகத்தையும் ஆய்வு செய்த ஆட்சியா், பணிகளை தரமாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் டி.நாகவேலு உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.