கும்பகோணம் வழக்குரைஞா் சுவாமிநாதனின் படுகொலையைக் கண்டித்து மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
கும்பகோணத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் எஸ். சுவாமிநாதன் அண்மையில் சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா். இதற்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜெகத்ராஜ் மற்றும் மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வேலு. குபேந்திரன் ஆகியோா் தலைமையில், 300-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனா். இதனால், வழக்கமான நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.